Published : 14 Nov 2021 03:08 AM
Last Updated : 14 Nov 2021 03:08 AM

2,109 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம் :

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இன்று 2,109 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 8-ம் கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 774 மையங்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,000 மையங்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 335 மையங்கள் என மொத்தம் 2,109 மையங்களில் முகாம் நடைபெற உள்ளது. இதில், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வைத்துள்ளனர். கையிருப்பில் போதுமான அளவுக்கு தடுப்பூசி இருப்பதால் இரண்டாம் டோஸ் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என 3 மாவட்ட ஆட்சியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x