Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் :

சென்னை

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 28 அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக டி.சந்திரசேகரன், ஏ.எட்வின் பிரபாகர், ஆர்.அனிதா, சி.கதிரவன், டி.சீனிவாசன், எஸ்.அனிதா, எம்.கீதா தாமரைச்செல்வன், வி.ரவி, எஸ்.ரவிக்குமார், எஸ்.மைத்ரேயி சந்துரு, ஏ.செல்வேந்திரன், எம்.வெங்கடேஷ்வரன், கே.வி.சஜீவ் குமார், டி.ரவிச்சந்தர், பி.பாலதண்டாயுதம், யு.எம்.ரவிச்சந்திரன், யோகேஷ் கண்ணதாசன், ஜி.நன்மாறன், டி.வெங்கடேஷ் குமார், எம்.ஷாஜகான், சி.சங்கமித்திரை, வி.யமுனாதேவி, இ.வேதபகத்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் எம்.லிங்கதுரை, என்.முத்துவிஜயன், டி.காந்திராஜ், பி.சுப்பராஜ், எஸ்.ஷாஜி பினோ, டி.பர்ஜானா கவுசியா, ஏ.கே.மாணிக்கம், எஸ்.பி.மகாராஜன் ஆகியோரும் அரசு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x