Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 107 கோடி பேருக்கும் அதிக மாக தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது. இதில் ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது.
ஆனால், கோவாக்சினுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் கோவாக்சின்தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் கள் வெளிநாடுகளுக்கு செல்வதில்சிக்கல் நிலவியது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு நேற்று அனுமதித் துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினும் சேர்க்கப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தடையின்றியும் தனிமைப்படுத்துதல் கெடுபிடி இன்றியும் இனி வெளிநாடுகளுக்குச் செல்லலாம்.கோவாக்சின் கரோனாவுக்கு எதிராக 77.8 சதவீதம் திறன் வாய்ந்தது ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT