Published : 30 Oct 2021 03:13 AM
Last Updated : 30 Oct 2021 03:13 AM
உத்தரபிரதேச மாநிலம் நொய் டாவில் கடந்த 20-ம் தேதி மிலாது நபி தினத்தையொட்டி முஸ்லிம்கள் சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது, அப்பேரணியில் கலந்து கொண்ட சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக தெரி கிறது.
இதுகுறித்து இந்து அமைப்பினர் அளித்த புகாரின் படி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 பேரை நேற்று கைது செய்தனர். இரு தரப்பினர் இடையே விரோதத்தை ஏற்படுத் துதல், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்தல், தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT