Published : 28 Oct 2021 03:06 AM
Last Updated : 28 Oct 2021 03:06 AM

பாக். கிரிக்கெட் அணி வீரர்களை புகழ்ந்த - 3 காஷ்மீர் மாணவர் சஸ்பெண்ட் : ஆக்ரா கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை

ஆக்ரா

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் பிச்புரி கிராமத்தில் ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி (ஆர்பிஎஸ்) அமைந்துள்ளது.

இந்த கல்லூரி வளாகத்தில் தங்கி படிக்கும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் 3 பேர், டி20 உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியை புகழ்ந்து கோஷங்கள் எழுப்பியும், வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கல்லூரியின் நிர்வாகம் மற்றும் நிதித்துறை இயக்குநர் டாக்டர் பங்கஜ் குப்தா கூறும்போது, "பிரதமரின் சூப்பர் ஸ்பெஷல் திட்டத்தின் கீழ் இந்த 3 மாணவர்கள் படித்து வந்தனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட அந்த 3 மாணவர்களும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் செயல் குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு (ஏஐசிடிஇ) தகவல் தெரிவித்துள்ளோம். இருப்பினும், மாணவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்" என்றார்

இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவின் உள்ளூர் தலைவர் ஷைலு பண்டிட் கூறும்போது, "ஆர்பிஎஸ் பொறியியல் கல்லூரிமாணவர்கள் மூன்று பேர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியது தெரியவந்தது. தேச விரோத செயலில் ஈடுபட்டதாக அந்த மாணவர்கள் மீது ஜகதீஷ்புரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x