Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM

திருப்பத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து :

திருப்பத்தூர்: திண்டுக்கல்லில் இருந்து மரத்தூள் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை ஜோலார்பேட்டை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, திருப்பத்தூர் அருகே தருமபுரி மெயின் ரோடு, வீட்டு வசதி வாரியம் அருகே லாரி வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த செல்வம் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தினால் சாலையின் ஒரு பகுதியில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் லாரியை நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இதுதொடர்பாக திருப்பத்துார் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x