Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய : காஷ்மீர் மருத்துவ மாணவிகள் மீது வழக்கு :

 நகர்: உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. காஷ்மீரின் நகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதுடன் அந்நாட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பகிரப்பட்டுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை நபீஸா அட்டாரி. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், பாகிஸ்தான் வீரர்களின் படத்துடன் ‘நாம் வெற்றி பெற்றோம்’ என வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதை அறிந்த பள்ளி நிர்வாகம் நபீஸாவை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் உள்ளூர் காவல் நிலையத்தில் நபீஸா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வீடியோ மூலம் நபீஸா மன்னிப்பு கேட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x