Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 633, பெண்கள் 457 என மொத்தம்1,090 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 141, கோவையில் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை26 லட்சத்து 97,418 ஆக அதிகரித்துள்ளது
இதுவரை 26 லட்சத்து 48,830 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,326 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 12,540 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 15 பேர் நேற்று உயிரிழந்தனர்.இதன்மூலம் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,048 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT