Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM
தமிழகத்தில் புதிதாக 1,127 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 628, பெண்கள் 499 என மொத்தம் 1,127 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 146, கோவையில் 128 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 95,216 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 26 லட்சத்து 46,163 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 13,034 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
15 பேர் உயிரிழப்பு
சென்னையில் மட்டும் 8,534 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT