Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM

- கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் - 750 படுக்கைகளுடன் கூடிய பொது மருத்துவமனை : நல்ல ஜி.பழனிசாமி திறந்துவைத்தார்

கோவை

கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 750 படுக்கை வசதிகளுடன் கூடிய பொது மருத்துவமனையை அதன் தலைவர் நல்ல ஜி.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

கோவை அவிநாசி சாலையிலுள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 750 படுக்கைகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது மருத்துவமனையை, கே.எம்.சி.ஹெச். தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்வில், மருத்துவமனை நிர்வாகிகள் தவமணிதேவி பழனிசாமி, அருண் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், நல்ல ஜி. பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை கடந்த 1990-ம் ஆண்டு 200படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 5 இடங்களில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருவதுடன் 2 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. அவிநாசி சாலையில் உள்ள பிரதான மருத்துவமனையில் மட்டும் ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தென்னிந்தியாவில் உள்ள பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றாக கே.எம்.சி.ஹெச். மருத்துவ மனை விளங்குகிறது. மருத்துவஉலகில் எந்த ஒரு சிகிச்சைக்கும்நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், அது உடனுக்குடன்கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் கடந்த 2019-ம்ஆண்டு கே.எம்.சி.ஹெச். மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது.

மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாக செயல்படும் இந்த பொது மருத்துவமனையில் ஏழைகள் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த கட்டணத்தில் தரமானமருத்துவ சேவைகள் வழங்கப்படும். இங்கு 11 நவீன ஆபரேஷன் தியேட்டர்கள் உள்ளன. சி.டி. ஸ்கேனர், எம்.ஆர்.ஐ. கேத்லேப், அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அனைத்து நவீன வசதிகள் கொண்டதாக கட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x