Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

நாட்டில் புதிதாக 15,786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

நாட்டில் புதிதாக 15,786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளி யிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 231 பேர் உயிரிழந்தனர்.

நாட்டின் புதிய நோய்த்தொற்றுகளில் கேரளாவில் 8,733 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 118 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் தற்போது ஒரு லட்சத்து 75,745 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது கடந்த 232 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். நாட்டின் மொத்த நோயாளிகளில் சிகிச்சையில் இருப்போர் எண் ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இது தற்போது 0.51 சதவீதமாக உள் ளது. இது கடந்த 2020 மார்ச் மாதம் கரோனா தொற்று பரவத் தொடங்கியதற்கு பிறகு மிகக் குறைந்த அளவாகும்.

கரோனா வைரஸ் தொற்றை கண்டறிய இதுவரை 59.70 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன. கரோனா தினசரி பாசிட்டிவ் விகிதம் 1.19 சதவீத மாக உள்ளது. இது கடந்த 53-வது நாளாக 3 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

நாடு தழுவிய கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 100.59கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x