Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 70-வது பிறந்தநாள் விழா, கட்சியின் மாநிலத் தலைமைஅலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 70-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை நடந்த விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, காங்கிரஸ் தேசியசெயலாளர்கள் டாக்டர் ஏ.செல்லக்குமார், கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் 70 கிலோ கேக் வெட்டினர்.
மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் ரஞ்சன்குமார், சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு உள்ளிட்டோர்பங்கேற்றனர். விழாவில் ஏழைகளுக்கு தையல் இயந்திரம், சேலை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை எம்எம்டிஏ காலனி பகுதியில் நடந்த விழாவில் மாநிலஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, மாநிலப் பொதுச் செயலாளர் எம்எம்டிஏ கோபி உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களுக்கு புத்தகப்பை, குடை, பெண்களுக்கு சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடும், அண்ணா சாலை தர்காவில் சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கே.எஸ்.அழகிரிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே தனது சொந்த கிராமமான திருப்பணிநத்தத்தில் நேற்று தனதுவீட்டில் இருந்த கே.எஸ்.அழகிரி,எந்த ஆடம்பரமும் வேண்டாம் என்றுகூறிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT