Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

தீபாவளிக்கு ஜோயாலுக்காஸில் நகை வாங்குபவர்களுக்கு - ரூ.100 கோடி கேஷ்பேக் பரிசு கூப்பன் அறிவிப்பு :

தீபாவளிக்கு நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள கேஷ்பேக் பரிசுகூப்பன் வழங்கும் திட்டத்தை ஜோயாலுக்காஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜோயாலுக்காஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளிக்காக ஜோயாலுக்காஸ் மெகா கேஷ் பேக் திட்டத்தைஅறிமுகம் செய்துள்ளது. அக்.22 (நேற்று) முதல் நவ. 5 வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.

இதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு தங்க நகை வாங்குபவர்களுக்கு ரூ.1,000 பரிசு கூப்பன் வழங்கப்படும். ரூ.25 ஆயிரம் மதிப்புள்ளவைரம், வெட்டப்படாத மற்றும் மதிப்பு வாய்ந்த நகைகளை வாங்கும்போதும் ரூ.1,000 பரிசு கூப்பன் கிடைக்கும். ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை வாங்குபவர்களுக்கு ரூ.500 பரிசு கூப்பன் உண்டு.

மேலும் எஸ்பிஐ கார்டு மூலம்நகை வாங்குபவர்களுக்கு 5 சதவீதகேஷ்பேக் (ரூ.2,500 வரை) கிடைக்கும். ஜோயாலுக்காஸ் அட்வான்ஸ் புக்கிங் பிளான் மூலம் 5 சதவீத முன்பணம் செலுத்தி, தங்கம் விலைஏற்ற இறக்கத்தில் இருந்துவாடிக்கையாளர்கள் தங்களைபாதுகாத்துக்கொள்ள முடியும். இங்கு வாங்கும் நகைகளுக்கு ஒரு வருட இலவச இன்சூரன்ஸ், இலவச பராமரிப்பு உண்டு.

ஜோயாலுக்காஸ் குழும தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறும்போது, “இந்த ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு புதுமையான முறையில் பரிசு கூப்பன்கள் மூலம் ரிவார்ட்வழங்க முடிவு செய்துள்ளோம். இக்கூப்பன்களை செலுத்தி மேலும்பல நகைகளை வாங்க முடியும்.இந்த வாய்ப்பை வாடிக்கையா ளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

பண்டிகைக்கான ஆடைகள், கலாச்சாரத்துக்கு ஏற்ப திறமையான டிசைனர்கள், கைவினைஞர்களால் செய்யப்பட்ட லிமிடெட்எடிஷன் சிறப்பு தீபாவளி 2021கலெக்‌ஷன் நகைகளும் வந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x