Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM

காரைக்குடி ஆவின் தலைவர் வீட்டில் ரூ.4 லட்சம் கொள்ளை : காரையும் எரித்துச் சென்ற கொள்ளையர்

காரைக்குடி ஆவின் தலைவர் வீட்டில் ரூ.4 லட்சம் ரொக்கம், 50 கிராம் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கல்லுவயலைச் சேர்ந்தவர் அசோகன். இவர் அதிமுக ஜெ. பேரவை மாவட்டச் செயலாள ராகவும், காரைக்குடி ஆவின் தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி பிரேமா, கல்லல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். தற்போது தேவகோட்டையில் வசிக்கின்றனர்.

கல்லுவயலில் இவர்களுக்குச் சொந்தமான வீட்டில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

பீரோவில் இருந்த ரூ.4 லட்சம், 50 கிராம் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்தனர். தொடர்ந்து வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்த சொகுசு காரையும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பினர்.

தகவலறிந்த டிஎஸ்பி வினோஜி, காரைக்குடி தெற்கு ஆய்வாளர் (பொ) மகேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினர்

போலீஸார் கூறுகையில், எதிர்பார்த்த பணம், நகை கிடைக்காத ஆத்திரத்தில் காரை எரித்து விட்டு சென்றிருக்கலாம். இருந்தபோதிலும் அரசியல் முன்பகையா என விசாரிக்கிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x