Published : 22 Oct 2021 03:05 AM
Last Updated : 22 Oct 2021 03:05 AM

24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு கரோனா : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிப்பு :

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 18, 454 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 நாட்களுக்கு பின் அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு கடந்த 4 நாட்களாக 15 ஆயிரம் என்ற அளவுக்குள் இருந்தது. 4 நாட்களுக்குப் பின் நேற்று கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இது முந்தைய நாளை விட 26% அதிகம். நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 18,454 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 27 ஆயிரத்து 450 ஆக உயர்ந்தது.

கரோனா தொற்று பாதிப்பால் நேற்று முன்தினம் நாடு முழுவதும் 160 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் மட்டும் 82 பேர் இறந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 17,561 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 95 ஆயிரத்து 808 ஆக உயர்ந்தது. தற்போது 1,78,831 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x