Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM
வாகனங்களில் மனித உரிமைகள் பெயரிலும், அரசு நிர்ணயித்த அளவைவிட மாறுபட்ட அளவிலும் நம்பர் பிளேட்களை பொருத்தியிருப்பவர்கள், தேவையற்ற வாசகங்களை எழுதியிருப்பவர்கள் மீதுபோக்குவரத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
மனித உரிமை அமைப்புகளின் பெயரைதனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிசைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தவிர, சில தனியார் அமைப்புகள் மனித உரிமை என்ற பெயரை சேர்த்துக்கொண்டும், தங்களை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொண்டும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, மனித உரிமை என்ற பெயரில் வாகனங்களில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றித் திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நம்பர் பிளேட்களில், மிரட்டும் வகையில் பெயர் எழுதி சுற்றித் திரிந்தவர்களை குறிவைத்து போக்குவரத்து காவல் துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். தேவையற்ற வாசகங்களை வாகனங்களில் ஸ்டிக்கராக ஒட்டியிருக்கும் நபர்கள் மீதும்,அரசு நிர்ணயித்த அளவு, எண்களின் நிறம்,இடைவெளி ஆகிய விதிமுறைகளை பின்பற்றாமல் நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1,892 வாகனஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT