Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM

மழை குறைந்ததால் பேச்சிப்பாறை அணை மூடல் :

கன்னியாகுமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் பேச்சிப்பாறை அணை அடைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கனமழையின்போது ஆறு, கால்வாய் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்தது.

நேற்று கனமழை நின்றது. விட்டுவிட்டு சாரல் பெய்கிறது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 41 மிமீ மழை பெய்தது.

ஆரல்வாய்மொழியில் 32 மிமீ, மயிலாடியில் 12, நாகர்கோவிலில் 13, சுருளகோட்டில் 16, பாலமோரில் 12, அடையாமடையில் 13 மிமீ மழை பதிவானது.

மழை குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,043 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. நீர்மட்டம் 43 அடியாக உள்ள நிலையில் அணை நேற்று அடைக்கப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72 அடியாக உள்ளது. அணைக்கு 1,075 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16.14 அடியாகவும், சிற்றாறு இரண்டின் நீர்மட்டம் 16.24 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x