Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில் தாமதமா? - ‘104’-ஐ தொடர்பு கொள்ளலாம் : பொது சுகாதார இயக்குநர் தகவல்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் ‘104’ மருத்துவ சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது:

மத்திய, மாநில நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் தற்போது ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. 5 தவணைகளாக இந்த நிதி வழங்கப்படும்.

19 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதை பெற தகுதியுடையவர்கள். இலங்கைத் தமிழர்கள் முழுமையாகவும், வெளி மாநிலத்தவர்கள் 2 தவணையில் பெற்றும்பயனடையலாம். ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்காக, ஆண்டுக்கு ரூ.950 கோடியை அரசு வழங்குகிறது. இதில் ரூ.10 லட்சம் பேர் பயனடைகின்றனர்.

ஆனாலும், முறையாக நிதியுதவி கிடைக்கவில்லை என 100-க்கும் மேற்பட்ட புகார்கள் மாதந்தோறும் வருகின்றன. நிதியுதவி பெற முடியாதவர்கள், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவிக்கலாம். Directorate of Public Health

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x