Published : 20 Oct 2021 03:07 AM
Last Updated : 20 Oct 2021 03:07 AM

நாட்டில் புதிதாக 13,058 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,058 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 231 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 94,373 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 52,454 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,83,118 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 227 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். மேலும் இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 0.54 சதவீதம் ஆகும். கடந்த 2020 மார்ச்சுக்கு பிறகு மிகக்குறைவாகும். குணமடைந்தோர் விகிதம் 98.14% ஆக உயர்ந்துள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மிக அதிக விகிதம் இதுவாகும்.

கரோனா தொற்றை கண்டறிய இதுவரை 59.31 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. புதிய நோயாளிகள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக புதிய நோயாளிகள் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு குறைவாக உள்ளது. என்றாலும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள்,மக்களுக்கு புதிய வழிகாட்டுதல் களை வெளியிட்டுள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x