Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

ரூ.1.50 கோடி மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது :

கோவை

கோவை பீளமேடு விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன். இவர், மாநகரகுற்றப்பிரிவு போலீஸில் அளித்திருந்த புகாரில், ‘‘சாயிபாபா காலனி கணபதி லேஅவுட்டைச் சேர்ந்த அருண்பிரகாஷ்(41), ஹோட்டல் மற்றும் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வருகிறார். இருவரும் இணைந்து ஹோட்டல் தொழில் தொடங்கலாம் எனக்கூறிஎன்னிடம் இருந்து ரூ.1.50 கோடி தொகையை வாங்கினார்.

ஆனால், கூறியபடி தொழில் தொடங்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே,அருண்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக்கூறியிருந்தார். மோசடி பிரிவின் கீழ், அருண்பிரகாஷ் மீது வழக்குபதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். அருண்பிரகாஷ் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் மருமகன் ஆவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x