Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி துப்புரவுப் பணியாளர் மணிகண்டன் (54). இவரை மேற்பார்வையாளர் ஜோதி முருகன் திட்டியதாகவும், விடுமுறை தராமல் இருந்ததாகவும் கூறி மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து உடன் பணிபுரிந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்தனர்.
கம்பம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து மேற்பார்வை யாளர் ஜோதிமுருகனை கைது செய்தனர்.
தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT