Published : 19 Oct 2021 03:06 AM
Last Updated : 19 Oct 2021 03:06 AM
காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு முகாம் வரும் 22-ம் தேதியோடு முடிவடைவதால், பாலிசிதாரர்கள் உடனடியாக தங்களது பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
எல்ஐசி நிறுவனத்தில் காப்பீடு எடுத்த பாலிசிதாரர்கள், காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் சிறப்பு பாலிசி புதுப்பித்தல் முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் இதுவரை 1.70 லட்சம் பாலிசிதாரர்கள் தங்களது பாலிசிகளை புதுப்பித்துள்ளனர். இந்த சிறப்பு முகாம் வரும் 22-ம் தேதியோடு நிறைவடைகிறது. எனவே, இதுவரை காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்காத பாலிசிதாரர்கள், சிறப்பு முகாமில் உடனடியாக தங்களது பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT