Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM
கோரிக்கை கடிதத்தை ஏற்று பட்டாசுவிற்பனைக்கான தடையை நீக்கியராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையின் முக்கியஅங்கமாக பட்டாசு உள்ளது. காற்று மாசுபடுவதைக் கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிப்பதற்கு நாடு முழுவதும் கால நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.அதிக புகையை வெளிப்படுத்தாத பசுமை பட்டாசுகளை தயாரிக்கஉச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அதன்படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்கிடையே, பட்டாசு விற்பனைக்கு டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், பட்டாசு விற்பனைக்கான தடையை விலக்கக் கோரி 4 மாநில முதல்வர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து, ராஜஸ்தானில் பட்டாசுவிற்பனைக்கான தடையை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நீக்கியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘‘நான் எழுதிய கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கைஎடுத்து பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக விதிக்கப்பட்ட தடையை நீக்கியதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் வாழ்வாதாரத்துக்கு இந்த பட்டாசுத் தொழிலையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில், உங்கள் கனிவுமிகு நடவடிக்கை ஒளியேற்றும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT