Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா நேற்று கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்களில் சசிகலாவும் ஒருவர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் சத்தியம் செய்யட்டும், கண் கலங்கட்டும் எங்களுக்கு என்ன.
என்னதான் ‘பில்டப்’ கொடுத்தாலும் அது செயற்கையாகத்தான் இருக்குமே தவிர, இயற்கையாக இருக்காது. அவரது நடிப்புக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.
ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்றது மக்கள் மத்தியில்எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் நினைக்கும் எதுவும்நடக்கப்போவதில்லை. சசிகலா அமமுகவில் சேரலாம். அதிமுகவில் இடம் இல்லை.
அதிமுக யானை போன்றது.அதன் மீது கொசு அமர்ந்து கொண்டு, நான்தான் யானையைதாங்கிப் பிடிக்கிறேன் என்றால் அது நகைச்சுவையாகத்தான் இருக்கும்.
அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சீமான் கருத்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT