Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM
தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான வருசநாடு, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு, கோம்பைத்தொழு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
தொடர் விடுமுறையால் தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நேற்று அதிகளவில் வந்திருந்தனர். இவர்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர்.
இதுபற்றி வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், தொடர் மழையால் அருவியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT