Published : 16 Oct 2021 06:10 AM
Last Updated : 16 Oct 2021 06:10 AM
15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய புட்சால் சாம்பியன்ஷிப் போட்டி தருமபுரியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக அணி, லீக் சுற்றில் மும்பை,ஆந்திரா, புதுச்சேரி, கேரளா, புனேஆகிய அணிகளை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
அரை இறுதியில் தமிழக அணி,கர்நாடகாவை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்துஇறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தமிழக அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
தமிழக அணியின் கோல் கீப்பர்ராகுல் கண்ணன் தொடரின் சிறந்தகோல் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் தமிழக அணியைச் சேர்ந்த 5 வீரர்கள், இந்தியபுட்சால் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த அணி அடுத்த மாதம் பராகுவேயில் நடைபெற உள்ள 15 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் கலந்து கொண்டு விளையாடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT