Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM

வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் :

மாநகராட்சி பகுதியில் விதிமீறல் கட்டிடங்களுக்கு கடிவாளம் போடுவதற்கு வரி நிர்ணயம் செய்யப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

வணிக கட்டிடங்கள் விதிமீறி கட்டும்போதே வார்டு உதவிப் பொறியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த கட்டிடங்களுக்கு வரைபட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா?, அதன் அடிப்படையில்தான் அந்த கட்டிடங்கள் கட்டப்படுகிறதா?, அவ்வாறு கட்டவில்லையென்றால் அதற்கு நோட்டீஸ் வழங்கி கட்டுமானப் பணிகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆனால், வார்டுகளில் உள்ள உதவிப் பொறியாளர்கள் கட்டும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு வரி நிர்ணயம் செய்யும்போதுதான் அதன் விதிமீறல்களை ஆராய்கின்றனர். காலம் கடந்த இந்த ஆய்வாலே வாகன நிறுத்தம் இல்லாத விதிமீறல் வணிகக் கட்டிடங்கள் அதிகரித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x