Last Updated : 16 Oct, 2021 06:13 AM

 

Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM

தீபாவளி விற்பனைக்காக தேனி மாவட்ட விவசாயிகள் - நாணல் கூடாரத்தில் வெங்காயம் இருப்பு வைப்பு :

தீபாவளிக்கு வெங்காயத்தின் தேவை அதிகரித்து விலை பல மடங்கு உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் பல டன் வெங்காயத்தை பக்குவப்படுத்தி கூடாரங்கள் அமைத்து பாதுகாக் கின்றனர்.

தேனி மாவட்டத்தில் நாக லாபுரம், கொடுவிலார்பட்டி, லட்சுமிபுரம், கோபாலபுரம், குன் னூர், அம்மச்சியாபுரம், பள் ளபட்டி, பாலகிருஷ்ணாபுரம் உட்பட பல பகுதிகளில் வெங் காயம் அதிகமாகப் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இவை அறுவடை செய்யப்பட்டுவருகின்றன.

உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வெங் காயத்தை விளைநிலங்களில் மேற்புரம் ஓடு பதித்த நாணல் கூடாரங்களை அமைத்து இருப்பு வைத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.15-க்குத்தான் வாங்குகின்றனர். எனவே உரிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீபாவளி விற்பனைக்காக பல டன் வெங் காயத்தை உலர வைத்து கூடா ரங்களில் பாதுகாத்து வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x