Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM
சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சென்னை எழும்பூர்- மங்களூரு சென்ட்ரல் இடையே வரும் 17-ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 17-ம் தேதி முதல் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். அதேபோல, மங்களூரு சென்ட்ரலில் இருந்து வரும் 19-ம் தேதி முதல் காலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ரங்கம், திருச்சி, ஈரோடு, திருப்பூர், வடகோவை, கோவை, போத்தனூர், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT