Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

கோவை வழியாக : மங்களூருக்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கம் :

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சென்னை எழும்பூர்- மங்களூரு சென்ட்ரல் இடையே வரும் 17-ம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் 17-ம் தேதி முதல் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். அதேபோல, மங்களூரு சென்ட்ரலில் இருந்து வரும் 19-ம் தேதி முதல் காலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ரங்கம், திருச்சி, ஈரோடு, திருப்பூர், வடகோவை, கோவை, போத்தனூர், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x