Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

உடுமலையில் போக்குவரத்து துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு :

உடுமலை: உடுமலை வட்டார போக்குவரத்து துறை சார்பில் நேதாஜி மைதானத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் 30-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கோட்டாட்சியர் கீதா, காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழிவேல், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பிரிட்டோ, சரவணன், பூங்கொடி, தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் செல்வதீபா, தீயணைப்பு அலுவலர் ஹரிராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வில் கலந்து கொண்டனர்.

பேருந்துகளில் அவசர கால வழி, பிரேக், வைபர், முகப்பு மற்றும் பின்பக்க விளக்குகள், இண்டிகேட்டர் சரியாக இயங்குகிறதா? என்பன குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தீ விபத்தின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x