Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM
திருப்பூர்: திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வீ.புகழேந்தி, ரஹ்மான் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அனைத்து தொழிற்சாலைகளும் 2022-ம் ஆண்டுக்கான தொழிற்சாலையின் உரிமத்தை இணையவழியில் ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதற்கு வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற தொழிற்சாலைகளின் உரிமத்தை 2022-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் புதுப்பிக்க https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தி பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட உடனே தங்கள் தொழிற்சாலையின் உரிமம் புதுப்பிக்கப்பட்டு, அதனை இணைய வழியிலேயே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT