Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM
திருப்பூர்: திருப்பூர் போயம்பாளையம் அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (62). கணபதிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்பிரபு (41). இருவரும் சேர்ந்து நூல் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், தனியார் நூற்பாலையில் பணிபுரியும் மேலாளர் குமார் என்பவரிடம், ரூ.7 லட்சத்துக்கு 30 ஆயிரத்துக்கு நூல் வாங்கி, அதற்கான பணத்தை 2 ஆண்டுகளாக கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. செந்தில்பிரபுவிடம், குமார் பணம் கேட்டபோது, செல்வராஜிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குமார், அவரது நண்பர் ராஜேந்திரன், செந்தில்பிரபு ஆகியோர் சேர்ந்து செல்வராஜை கடத்திச் சென்றனர். புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 3 பேரை கைது செய்து, செல்வராஜை மீட்டனர். இந்நிலையில், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த செளந்திரபாண்டி (20), அதே பகுதியை சேர்ந்த நவீன் (20) மற்றும் ராம்நகரை சேர்ந்த சர்புதின் (32) ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து அனுப்பர்பாளையம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT