Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM
உடுமலை வட்ட முற்போக்காளர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் சாதிக்பாட்ஷா தலைமை வகித்தார்.
இந்திய ஐக்கிய கம்யூ. கட்சி மாவட்டச் செயலாளர் மூர்த்தி, தமிழர் பண்பாட்டு பேரவை தலைவர்பால்நாராயணன், சமத்துவ அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் தங்கராஜ், திராவிட தமிழர் பேரவை மாநில பொருளாளர் தங்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய அரசியல் சட்டம் வழங்கியஅடிப்படை உரிமைகளை பறிக்கும்வகையில் வாளவாடி ஊராட்சியின் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதற்கு துணைபோனஅதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்மீது நடவடிக்கை எடுப்பதோடு,ஊராட்சி நிர்வாகத்தை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT