Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

கோவை மாநகராட்சி மக்கள் தொடர்பு : அலுவலர் பொறுப்பேற்பு :

கோவை: கோவை மாநகராட்சியின் புதிய மக்கள் தொடர்பு அலுவலராக பாரதிதாசன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தவர் துரைசாமி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலூர் மண்டல அலுவலக மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணிபுரிந்து வந்த பாரதிதாசன் கோவை மாநகராட்சி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x