Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM
தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நகர்ப்புறத்தில் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை பரிட்சார்த்த அடிப்படையில் செயல்படுத்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தின் நெறிமுறைகள்படி, சென்னையில் 2 மண்டலங்கள், மீதமுள்ள 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 மாவட்டத்துக்கு தலா ஒரு பேரூராட்சி என 37 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, கோவை மாநகரில் கிழக்கு மண்டலம், திருப்பூர் மாநகரில் 3-வது மண்டலம் மற்றும் வெள்ளக்கோவில் நகராட்சியில் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பேரூராட்சிகளை பொறுத்தவரை, திருப்பூர்- குமரலிங்கம், கோவை- வேட்டைக்காரன்புதூர், நீலகிரி- தேவர்சோலை ஆகிய பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT