Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு :

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 660 கனஅடியிலிருந்து 828 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென் பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நந்தி மலை, பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 660 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று காலை 828 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து விநாடிக்கு 828 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணையில் 41 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 828 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தென் பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 828 கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x