Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM
புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன் பண்ணை அருகே உள்ள ஆற்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் துர்நாற்றத்துடன் மிதப்பதாக முதலியார்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் தண்ணீரில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். இறந்து 3 நாட்களாகியிருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றவிவரம் ஏதும் தெரியவில்லை. இதையடுத்து முதலியார்பேட்டை போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் ஆற்றங்கரைக்கு வந்த போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து ஆற்றில் வீசிச் சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT