Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

புதுச்சேரியில் 59 பேருக்கு கரோனா :

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்: புதுச்சேரியில் புதிதாக 4,817 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 33, காரைக்காலில் 10, ஏனாமில் 7, மாஹேவில் 9 பேர் என மொத்தம் 59 பேருக்கு (1.22 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 91 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 560 பேரும் என 651 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர்களின் எண்ணிக்கை 1,849 ஆக உயர்த்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதிதாக 24 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 710 (98.03 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை 10 லட்சத்து 63 ஆயிரத்து 123 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x