Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

காரைக்குடியில் பைக்குகளை திருடிய 2 பேர் கைது :

காரைக்குடியில் பைக்குகளை திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். 15 வாகனங் களை பறிமுதல் செய்தனர்.

காரைக்குடி, திருப்பத்தூர், குன்றக்குடி உள்ளிட்ட பகுதி களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடுபோயின. இதையடுத்து எஸ்.பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி வினோஜி மேற்பார்வையில் காரைக்குடி குற்றப்பிரிவு எஸ்.ஐ பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரோந்து சென்றபோது 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, பெட்ரோல் இல்லாததால் வண்டியை தள்ளிக் கொண்டு செல்வதாகக் கூறினர்.

ஆனால் போலீஸார் சோதனையிட்டதில் பைக்கில் பெட்ரோல் இருந்தது. சந்தேகமடைந்த போலீஸார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (27), பாலமுருகன் (38) என்பதும், காரைக்குடி, திருப்பத்தூர், குன்றக்குடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பைக்குகளை திருடி வந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து, 15 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x