Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM
வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சல் வார விழாவையொட்டி இந்திய அஞ்சல் துறை சார்பில் வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு சிறப்பு அஞ்சல் உறை நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி வில்லிபுத்தூர் துணை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு அஞ்சல் உறையை விருதுநகர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் வெளியிட்டார். அதை வில்லிபுத்தூர் ஆவின் தலைவர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT