Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு :

வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சல் வார விழாவையொட்டி இந்திய அஞ்சல் துறை சார்பில் வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு சிறப்பு அஞ்சல் உறை நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சி வில்லிபுத்தூர் துணை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு அஞ்சல் உறையை விருதுநகர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் வெளியிட்டார். அதை வில்லிபுத்தூர் ஆவின் தலைவர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x