Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

சுந்தரக்கோட்டை அரிசி ஆலையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் :

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில், மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த 9-ம் தேதி ஆய்வு செய்தார்.

அப்போது, நவீன அரிசி ஆலையின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மெக்கானிக்கல் பிரிவு துணை பொறியாளராகப் பணியாற்றிய கே.குணசேகரன், திருவண்ணாமலை மண்டலத்துக்கு உட்பட்ட செய்யாறு நவீன அரிசி ஆலைக்கும், பொறியாளர் ஆர்.விக்னேஷ் பட்டுக் கோட்டை நவீன அரிசி ஆலைக் கும், பொறியாளர் ஆர்.ஆனந் தன் திருவாரூர் நவீன அரிசி ஆலைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x