Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

திருவிடைமருதூரில் பயணிகள் ரயில் நின்று செல்ல கோரி ஆர்ப்பாட்டம் :

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் கரோனா ஊரடங் குக்கு முன்னர் அனைத்து பயணிகள் ரயில்களும் நின்று சென்றன.

இந்நிலையில், மயிலாடுதுறை- திருச்சி இடையே கடந்த 7-ம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில் திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. எனவே, திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் முன்புபோல, பயணி கள் ரயில் நிற்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் ரயில் வந்தபோது, திருவிடைமருதூர் ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலை வர் டி.சிவசுப்பிரமணியன் தலைமை யில் அனைத்து பொதுநல அமைப் புகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x