Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம் - மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு :

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற் பனையில் மயிலாடுதுறை மாவட் டத்துக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலை யத்தில் தீபாவளி சிறப்பு விற்ப னையை ஆட்சியர் ரா.லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியது:

தீபாவளி பண்டிகையை முன் னிட்டு, மயிலாடுதுறையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ.1.25 கோடி, சீர்காழி கோ-ஆப்டெக்ஸ் நிலை யத்துக்கு ரூ.60 லட்சம் என மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரூ.1.85 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கனவு நனவு திட்டத்தின்கீழ், வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.500 வரை 10 மாத தவணைகள் மட்டும் பெறப்பட்டு, 11 மற்றும் 12-வது மாத தவணைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்துகிறது. அத்தொகையில் பொதுமக்கள் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். எனவே, பொது மக்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத் துக்கு உறுதுணையாக இருந்து நெசவாளர்களின் தொழில் வளர பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சௌ.சாதிக் அலி, மண்டல இயக்குநர் லெனின், வர்த்தக மேலாளர் கந்தசாமி, விற்பனை நிலைய மேலாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x