Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

வாக்கு எண்ணிக்கை குறித்து பயிற்சி அளிக்க வந்த ஓய்வுபெற்ற பிடிஓ உயிரிழப்பு :

தென்காசி: திண்டுக்கல் மாவட்டம், திருநகரைச் சேர்ந்தவர் அருள்சேகரன் (65). ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான இவர், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கீழப்பாவூர் ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி அளிக்க வந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது, நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அருள்சேகரன், மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக சக அலுவலர்கள் அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x