Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM
கடந்தாண்டு சம்பா பயிருக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,597 கோடியை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன. இத்தொகை அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டு சம்பா நெல் சாகுபடி பாதித்த சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.1,597 கோடியை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன. விவசாயிகளுக்கான இழப்பீட்டை கணக்கிடும் பணி முடியும் நிலையில் உள்ளது. இப்பணி இந்த வாரம் முடிவடைந்துவிடும். அதனால் அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் கடந்தாண்டு சம்பா மகசூல் பாதிப்புக்கான பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT