Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM

பாகிஸ்தான் தீவிரவாதி டெல்லியில் கைது : நாசவேலை திட்டம் முறியடிப்பு

தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான்தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் நடத்தத் திட்டமிட்டு இருந்த நாசவேலை திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பல்வேறு பண்டிகைகள் வர இருப்பதை அடுத்து தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு அனுப்பிய தகவலில் மாநிலத்தில் பாதுகாப்பை பலமடங்கு அதிகரிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் பதுங்கிஉள்ள தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவ்வப்போது தேடுதல் வேட்டையையும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில். டெல்லியின் லட்சுமி நகர் அருகே ரமேஷ் பார்க் பகுதியில் தீவிரவாதி பதுங்கி இருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீஸார் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதியை சுற்றி வளைத்து போலீஸார் பிடித்தனர்.

விசாரணையில் அவரது பெயர்முகமது அஷ்ரப் என்கிற அலிஎன்று தெரியவந்தது. இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர். மேலும் போலி இந்திய அடையாள அட்டையுடன் அவர் டெல்லியில் மறைந்து இருந்ததும் தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 60 தோட்டாக்கள், ஒரு கையெறி குண்டு, 2 பிஸ்டல் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி யுள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறியதாவது: கைது செய்யப்பட்ட தீவிரவாதி பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் பிரிவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்து. மிகப்பெரிய நாசவேலையை நடத்தத்திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த நாசவேலை திட்டம் முறிய டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x