Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

தமிழகத்தில் புதிதாக 1,289 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 757, பெண்கள் 532 என மொத்தம் 1,289 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 164, கோவையில் 137, செங்கல்பட்டில் 104 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 80,857 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26 லட்சத்து 29,201 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,421 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 15,842 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,814 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x