Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

நீலகிரி மலை ரயில் சேவை 5-வது நாளாக இன்றும் ரத்து :

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்-உதகை இடையே கடந்த 9-ம் தேதி மலை ரயில் இயக்கப்பட்டது. அப்போது, கல்லாறு-அடர்லி இடையே மண் சரிவு ஏற்பட்டதால், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சீரமைப்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், 5-வது நாளாக இன்றும் (அக்.13) மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x