Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி என்ற அளவில் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக 11-ம் தேதி மாலையிலேயே நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாகவும், மாலை அளவீட்டின்போது 24 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியைக் கடந்துள்ள நிலையில் பிரதான அருவி, தொங்கும் பாலம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் நடைபாதையை வெள்ளம் சற்றே மூழ்கடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்புடன் கொட்டத் தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT