Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பதாகைகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டார்.
தொடர்ந்து புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, மாவட்ட தாய் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் லீமா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், ஆடைகள் அடங்கிய கிப்ட் பேக் வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா மற்றும் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT